IMF கலந்துரையாடலுக்காக இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு பறந்தனர்

0
65

நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக இன்று காலை நாட்டிலிருந்து புறப்பட்டனர்.

அதன்படி, அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள ஐஎம்எப் தலைமையகத்தில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தை ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெற உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here