113ஐ பூர்த்தி செய்துவிட்டோம் – ராஜபக்ஷ அணியை கதிகலங்க வைத்துள்ள செய்தி

Date:

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிகொள்வதற்கு தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல ‘லங்காதீப’விடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி தற்போது சுயாதீன எம்.பி.க்களாக உள்ள 41 பேரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஏனைய எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்மன் கிரியெல்ல, பிரேரணை சமர்ப்பிக்கப்படும் விதம், கையளிக்கப்பட்டதன் பின்னர் ஏற்படும் நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து மேலும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

உலக வங்கி – இலங்கை அரசாங்கம் இடையே ஐந்தாண்டு திட்டம் கைச்சாத்து

உலக வங்கி குழுமமும், இலங்கை அரசாங்கமும் இணைந்து புதிய ஐந்தாண்டு கூட்டாண்மை...

பிள்ளையான் விளக்கமறியலில்

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) வழக்கு தீர்ப்பு...

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...