சீனா , இந்தியாவிடம் இருந்து மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன்

Date:

டாலர் நெருக்கடியை சமாளிக்க மேலும் ஒரு பில்லியன் டாலர்கள் கடன் கிடைக்கும் என அரசாங்கம் நம்புகிறது.

தற்போது அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி கூட ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து எரிபொருள் இறக்குமதிக்கு இன்னும் 200 மில்லியன் டாலர்கள் மட்டுமே பாக்கி உள்ளது. அந்த அளவு தீர்ந்துவிட்டால், எரிபொருள் இறக்குமதியும் நின்றுவிடும்.

எனவே, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக சீனா மற்றும் இந்தியாவிடம் இருந்து தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்வனவு செய்யுமாறு பொது திறைசேரி விடுத்த கோரிக்கை தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, உலகின் பல நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய மறுத்துள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன. இது ரஷ்யாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது மற்றும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிலிருந்து வழங்குகிறது

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல அமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டு – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு மாடி கட்டிடம் கொண்ட நிலத்தை குத்தகைக்கு...

தங்கம் விலை – இன்றைய நிலவரம்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன்...

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி

மாலைதீவு ஜனாதிபதி முகமது முஹைதீனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுர குமார...

இ.தொ.கா 86 வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 86ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, இலங்கை தொழிலாளர்...