மின்சார சட்ட திருத்த மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் – மின்வாரிய பொறியாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்

0
173

மின்சாரத் திருத்தச் சட்டமூலம் நாளை (09) பாராளுமன்றத்தில் நிச்சயமாகக் கொண்டுவரப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் பொறியியலாளர்கள் குழு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை எதிர்ப்பதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

நாட்டின் மின்சாரம் துண்டிக்கப்படலாம் என சில மின் பொறியியலாளர்கள் மிரட்டல் கடிதங்கள் கூட அனுப்பியதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை, மின்சார சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நள்ளிரவு முதல் அனைத்து கடமைகளில் இருந்தும் இராஜினாமா செய்ய இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here