09 விசேட புகையிரத சேவை

Date:

பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரத்திற்கு 09 விசேட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இன்று (12) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

இன்று அதிகாலை 12.40 மற்றும் இரவு 9.00 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

13 ஆம் திகதி அதிகாலை 3.30, மதியம் 12.40, மாலை 04.40, மாலை 06.00 மற்றும் இரவு 09 மணிக்கு அனுராதபுரத்துக்கு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அனுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக புகையிரத பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

6வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் DP Education

இலங்கையின் முன்னணி ஆன்லைன் கல்வி தளமான DP Education, இன்று (அக்டோபர்...

மதுக்கடைகளுக்கு பூட்டு

தீபாவளி தினத்தன்று வட மாகாணத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியிடம்...

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கும் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய...

தங்கம் விலை நிலவரம்

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...