புது வருடம் பிறந்துள்ள நிலையில் அரசாங்கம் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அதிரடி நடவடிக்கைகளை செயற்படுத்வென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க பயணத்தை இடைநடுவில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.
ஜனவரி 10ம் திகதிக்குப் பின் நாடு திரும்ப இருந்து பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 14 அல்லது 15ம் திகதிகளில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற உள்ளதாகவும் அதில் அரசாங்கம் குறித்து விமர்சனம் மற்றும் அதிருப்தி வெளியிடும் அமைச்சர்கள் பதவி நீக்கம்செய்யப்பட்டு புதியவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
எவ்வாறாயினும் 18ம் திகதிக்கு முன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.