கொலை குற்ற சந்தேகநபர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

0
69
Shooting from a pistol. Reloading the gun. The man is aiming at the target

கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் ஒருவர் அதிகாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தெல்வல – பிடகந்த, உடகரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 18ஆம் திகதி ஹன்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட வேண்டிய சந்தேகநபர் இவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அதிகாலை ஹன்வெல்ல – தித்தெனிய, கிம்புல்பேனய பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

காவல்துறையின் தாக்குதல்.காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here