சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் ; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

யூடியூப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பணிப்பாளர்களுடன் கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சில சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் பின்பற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு சட்டங்கள் இருந்தாலும், சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்கு அவ்வாறான சட்ட கட்டமைப்புகள் எதுவும் இல்லை என தெரிவித்தார்.

இதன் விளைவாக சிங்கப்பூரில் தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தை தாம் கொண்டு வந்துள்ளதாகவும், அதனை ஆராய்ந்து எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்ற சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சஜித் – ரணில் இடையே ரகசிய சந்திப்பு?

எதிர்காலத்தில் சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி...

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் கருத்து

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்குமாயின்,...

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...