மல்வானை வழக்கில் அனைவரும் விடுதலையாக வாய்ப்பு, சாலிய பீரிஸ் அதிரடி வாதம்

Date:

மல்வானையில் பாரிய அதிசொகுசு வீடொன்றை நிர்மாணித்தமை தொடர்பில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச மற்றும் திருகுமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (07) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கின் பிரதான அரசாங்க சாட்சியான, வீட்டை நிர்மாணித்த கட்டட நிபுணரான முதித்த ஜெயக்கொடியிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

எஃப்.சி.ஐ.டி மற்றும் நீதிமன்றத்தின் முன்பு தான் கூறிய அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட திருகுமார் நடேசன் சார்பில் இன்று ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முதித்த ஜெயக்கொடியிடம் குறுக்கு விசாரணை செய்ததுடன், அவர் செலுத்திய வருமான வரியை மீட்பதற்காக விண்ணப்பித்த ஆவணங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதன்படி சட்டமா அதிபர் திணைக்களம் முதித்த ஜயக்கொடியை அரசாங்க சாட்சியாக பயன்படுத்தியமையினால் வழக்கு வீழ்ச்சியடையும் தருவாயில் உள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடுத்த விசாரணைக்கு அழைக்காமலேயே விடுவிக்கும் போக்கு காணப்படுவதாகவும், அது ஜனவரி 21ஆம் திகதி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...