Thursday, October 24, 2024

Latest Posts

ஒரு காலத்தில் பேட் மேன், பஸ் மேன் என்று அழைப்பதால் அவமானங்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை – சஜித்

கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெண்களின் உடல் நலம் பற்றி பேசும் போது பேட் மேன் என்றும், தற்போது பஸ்கள் கொடுக்கும்போது பஸ் மேன் என்றும் முகநூலில் அழைக்கின்றனர். அவமானப்படுத்துபவர்கள் சொகுசு பஸ்களை வாங்கி விருப்பு இலக்கங்களை ஒட்டுகின்றனர். கட்சி சின்னம் போன்றவற்றை ஸ்டிக்கர்களாக ஒட்டி வாக்கு கேட்டு விட்டு நாடு முழுவதும் சுற்றி வருவதாக கூறிய எதிர்கட்சி தலைவர் அப்படி செய்தாலும் பாடசாலைகளுக்கு இலவச பஸ் வழங்குவது தவறு என குற்றம் சாட்டுவதாக எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நுகேகொட மகாமாயா பெண்கள் கல்லூரிக்கு சக்வலவுடன் இணைந்து பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் 66 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பேரூந்து ஒன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதன்படி தற்போது வரை சக்வல திட்டத்தில் ரூ. 319,200,000 பெறுமதியான பேருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.கடந்த காலத்தில் திருடர்கள் கூட்டத்திற்கு நாடு கையளிக்கப்பட்ட பின்னர் நாட்டை சுதந்திரமாக எழுதி நாட்டின் வளங்களை சுரண்டி கொள்ளையடித்தார்கள்..

வெளிநாட்டு ஆதரவு நிதிகளை கொண்டுவந்து நாட்டை கட்டியெழுப்ப முடியும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டுக்குள் திருடப்பட்ட பணம் திரும்பவும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தவுடன் வசூலிக்கப்படும். சக்வால திட்டத்தின் கீழ் பேருந்து வழங்கும் திட்டம் தவறான முறையில் விளக்கப்படுவதாகவும், அது பொருட்களை விநியோகம் என்று கூறுவதாகவும், ஆனால் இது இலவசக் கல்வி என்ற கருத்தை மேலும் வலுப்படுத்துவதே தவிர அரசியல் நோக்கத்திற்காக அல்ல என்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.

இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் உதவி தேவைப்படுவதாகவும், அவற்றில் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அவை பெறப்படுவதாகவும், அதற்காக நல்ல தொடர்பு இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போது டொலர்கள் உருவாக்கப்பட்டதாக விசித்திரக் கதைகள் கூறப்பட்ட போதிலும் இதுவரையில் டொலர்கள் அதிகரிக்கவில்லை எனவும், நன்கு கல்வி கற்கும் பிள்ளைகளின் தலைமுறையினூடாக நாட்டை இந்நிலையிலிருந்து மீளச்செய்ய முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்த போதும் அரசாங்கம் கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களை கொண்டு வருவதற்கு தடை விதித்திருந்ததாகவும் அதனால் பல பாடசாலைகளுக்கு நட்புறவு வகுப்பறை வழங்கும் வேலைத்திட்டம் சில காரணங்களால் தடைப்பட்டதாகவும் ஆனால் அது நடக்கவில்லை எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

சக்வல வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பஸ்கள் ஒருபோதும் நிதிக்காக பாடசாலைகளுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் இந்த பஸ்களுக்கான பணம் அனைத்தும் செலுத்தப்பட்டு அனைத்து பஸ்களும் அந்தந்த பாடசாலைகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.