மற்றுமொரு அமைச்சர் பதவி விலகத் தயார்!

Date:

மக்களின் பொதுப் பிரச்சினைகளை பகிரங்கமாகப் பேசினால் பதவியில் இருந்து நீக்கிம் செய்தால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

மக்கள் வரிசையில் நிற்கக் கூடாது என்றும், இதுபோன்ற விஷயங்களைப் பார்த்தும் பார்க்காதது போல இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாகவே பொது மக்களின் குரல்கள் வெளிவருவதாகவும் எனவே அந்த விமர்சனங்களை கவனமாக செவிமடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) நாடு செல்ல வேண்டும் என்று கூறிய அவர், பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் வீதியில் இறங்க முடியாது என்றும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்க டொலர் விற்பனை விலை மீண்டும் உயர்வு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நேற்று (14) ஆம் திகதி தினசரி...

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...