கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் 60க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ள அதேவேளை, 60க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.