IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

Date:

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028 ஆம் ஆண்டுவரை அரசு வரி வருவாயை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க முடியாது என்று வீடமைப்பு, கட்டுமான மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி. பி. சரத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் இருக்கிறோம். அந்த ஒப்பந்தத்தின் படி, 2028 வரை கீழ்மட்டத்தில் வாழும் மக்களின் தேவைகளுக்காக இந்த வரி பணத்தை பயன்படுத்த முடியாது. நிவாரணங்களும், உதவிகளும் வழங்க முடியாது,” என அவர் கூறினார்.

பொலன்னறுவை மாவட்டத்தில் ‘திட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர் சமூகத்தினருக்கு மீன்பிடி உபகரணங்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வில் நேற்று (31) கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...