நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

0
217

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை 2ம் திகதி சந்தித்து உரையாட உள்ளது.

ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும், கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் சமீபத்தில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்ய பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி மற்றும் கூட்டணியின் அரசியல் குழு உறுப்பினர்கள் சிலரும் இந்த சந்திப்பில் பங்கு பெறுவார்கள் எனவும், மலையக மக்கள் தொடர்பான அவசர பிரச்சினைகள் மற்றும், நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் ஆகியவை தொடர்பில் உரையாட உள்ளதாக மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here