நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை குறித்த திகதியிலும் நிறைவேற்று அதிகாரமுள்ள அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தையும் குறித்த திகதிக்கு பல நாட்களுக்குப் பின்னரும் வழங்க பொது திறைசேரி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனவரி முதல் அடுத்த சில மாதங்களுக்கான செலவுகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தின் பணப்புழக்க வரம்புகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகரிக்கப்பட்டதுடன், இன்றைய (17) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டின் போது வெளிப்படுத்தப்பட்டது.
N.S