ரணிலை எமது ஜனாதிபதி வேட்பாளர் என கூற முடியாது

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்று கூறுவதற்கு கட்சிக்கு உரிமை உண்டு எனவும், ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவ்வாறு கூறுவதற்கு தற்போது தயாராக இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்தவரை அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அவர் கட்சி வேட்பாளர் என்று சொல்ல அவருக்கு உரிமை உள்ளது.

ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை வேட்பாளராகக் கூறத் தயாராக இல்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எமது கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ உட்பட எமது அரசியல் சபையினால் எடுக்கப்படும் தீர்மானம் இது. அந்தக் குழுவை எடுத்துக்கொண்டால் சில சமயம் அதில் ஒரு பெயர் வரும்போது ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் வந்துவிடும். ஆனால் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை, உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். நாட்டையும் மக்களையும் பற்றி சிந்தித்து சரியான முடிவை எடுங்கள்.

நேற்று (16) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...

உள்ளூர் வாகனச் சந்தையில் பாரிய விலை உயர்வு?

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலரை...

டிஜிட்டல் சேவைகள் 18% பெறுமதி சேர் வரிக்கு சஜித் எதிர்ப்பு

ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் டிஜிட்டல் சேவைகள் மீது அரசாங்கம் 18%...

விமலுக்கு CID அழைப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவை நாளை...