குஜராத்தில் படகு கவிழ்ந்து விபத்து – 14 பேர் பலி!

Date:

இந்தியாவின், குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில், படகில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்கள் 12 பேரும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

படகில் தனியார் பாடசாலை ஒன்றின் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களில் யாரும் பாதுகாப்பு ஜெக்கெட் அணியவில்லை என்றும் கூறப்படுகின்றது.

படகு விபத்தையடுத்து தீயணைப்பு படையினர் ஏரியில் மூழ்கிய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

சுற்றுலா சென்ற மாணவர் குழுவொன்றை ஏற்றிச் சென்ற படகொன்றே நேற்று (18) பிற்பகல் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுவரை 7 மாணவர்களை தீயணைப்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ள நிலையில், காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...