சிஐடிக்கு சென்ற தயாசிறி ; போலி கையெழுத்தை பயன்படுத்தியதாக முறைப்பாடு!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனது போலி கையெழுத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை வழங்கியுள்ளதாகவும், போலியான கையொப்பம் இட்டுள்ளதாகவும் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

மேலும், அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் போலியான ஆவணங்கள் என்றும், அதில் அவரது போலி கையெழுத்தும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு குழுவும் போட்டியிடவில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான போலிப் போட்டியாளர்களால் ஏமாற வேண்டாம் என பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டத்தை தோண்டத் தோண்ட தங்கம் வரும்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்,...

இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பலாலி பகுதிகளில் தற்போது இராணுவப் பயன்பாட்டில் உள்ள தனியார் காணிகளை...

இலங்கைக்கு பாம்பு, ஆமை கடத்தும் மர்ம கும்பல்

சென்னையை மையமாக வைத்து, வெளிநாடுகளில் இருந்து அரியவகை உயிரினங்கள் கடத்தப்பட்டு, அவை...

21ஆம் திகதிக்கு பின்னர் புலம்ப வேண்டாம் – நாமல்

தற்போதைய அரசாங்கத்தால் அநீதி இழைக்கப்பட்ட அனைவரும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு...