சிஐடிக்கு சென்ற தயாசிறி ; போலி கையெழுத்தை பயன்படுத்தியதாக முறைப்பாடு!

Date:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தனது போலி கையெழுத்தைப் பயன்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முயற்சித்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு செய்துள்ளார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கை சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை வழங்கியுள்ளதாகவும், போலியான கையொப்பம் இட்டுள்ளதாகவும் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.

மேலும், அளிக்கப்பட்ட வேட்புமனுக்கள் போலியான ஆவணங்கள் என்றும், அதில் அவரது போலி கையெழுத்தும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு குழுவும் போட்டியிடவில்லை எனத் தெரிவித்த அவர், இவ்வாறான போலிப் போட்டியாளர்களால் ஏமாற வேண்டாம் என பிரதேசவாசிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...