செந்தில், ஜீவன் தலைமையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இதொகா குழு

Date:

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் சந்தித்தனர்.

இந்தியாவில் தெலுங்கானா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடம்பெற்ற பயிற்சி திட்டத்துக்கு முதல் கட்டமாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருபது பேரை தெரிவு செய்து, அங்குள்ள உள்ளூராட்சி மன்றங்களின் அது சார்ந்த நிவனங்களில் பயிற்சி பெறுவதற்கான ஏற்பாடுகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னெடுத்திருந்தார்.

குறித்த பயிற்சியை நிறைவு செய்து அங்கு அவர்கள் பயிற்சி பெற்ற விடயங்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரயாலயத்தில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு விளக்கமளித்ததுடன், அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...