சஜத்தை கைவிட்டு சம்பிக்கவின் கரம் பிடிக்கும் தலதா அத்துகொரல!!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரியில் மாவட்ட அமைப்பாளர் பதவியொன்று தொடர்பில் தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவுடன் நீண்டகாலமாக முரண்பட்டமையே இதற்குக் காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43ஆவது படையணியின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 23ஆம் திகதி மொனார்க் இம்பீரியல் மண்டபத்தில் நடைபெற்ற போது தலதா அத்துகோரளவும் கலந்து கொண்டார்.

பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெருமளவானோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மாத்திரம் அக்கட்சியின் சார்பில் கலந்துகொள்ள தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும், தலதா அத்துகோரள, ஹேஷா விதானகேயுடனான மோதலின் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி, 43ஆவது படையணியில் இணைந்தால், அது தன் மூக்கை தானே வெட்டிக் கொள்வதற்கு இணையாக அமையும் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அவர் 43வது படையணியில் இணைந்தால், அவர் தலைமையில் 43வது மகளிர் படைப்பிரிவைத் தொடங்க முடியும் என்பதால் அது சம்பிக்கவிற்கு கிடைக்கும் மாபெரும் வெற்றியாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...