சனத் நிஷாந்த பலியான விபத்தில் கொள்கலன் சாரதி கைது

Date:

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவருக்குப் பாதுகாப்பில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கொள்கலன் காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் கொள்கலன் போக்குவரத்து வாகனத்துடன் மோதி நெடுஞ்சாலையின் பாதுகாப்பு தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த இராஜாங்க அமைச்சர் உட்பட மூவர் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அமைச்சர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...