வடக்கில் தமிழ் மக்களின் 100 ஏக்கர் காணிகளை விடுவிக்க பணிப்பு

Date:

வடக்கில் பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் என அடையாளம் காணப்பட்ட 100 ஏக்கர் காணிகளை ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மாவட்டச் செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்தப்படும் தமது தனியார் காணிகளை கையளிப்பதாகும். அடையாளம் காணப்பட்ட காணிகளில் நடத்தப்பட்ட முகாம்களை வேறு இடங்களில் நிறுவி அந்த காணிகளின் முந்தைய உரிமையாளர்களுக்கு மாற்றுமாறு சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்த காணிகளின் உரிமை மாவட்ட செயலாளர்கள் ஊடாக மக்களிடம் கைமாற்றப்பட உள்ளது. பெப்ரவரி 11ஆம் திகதிக்கு முன்னர் இந்தக் காணிகளை மக்களுக்கு விடுவிக்குமாறும் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் 75 ஆவது சுதந்திரத்துடன் இணைந்து இந்தக் காணிகள் விடுவிக்கப்படும் என்றும் தமிழ் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் இன்னும் காணிகள் இருப்பின் சட்டரீதியான நிலையையும் கண்டறிந்து கையளிப்பதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...