ஜனாதிபதியின் உத்தரவால் தேர்தல் ஆணைக்குழு சிக்கலில்

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராகப் பிறப்பித்த உத்தரவு காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழு கடும் சிக்கலில் சிக்கியுள்ளதாக அதிகாரி ஒருவரை மேற்கோள் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வரித் திருத்தங்கள் மூலம் வருமானம் கிடைக்கும் வரை மேலும் அரச செலவீனங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட கடன் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வதை அரச நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவை மீறும் எந்தவொரு அதிகாரியும் தனது தனிப்பட்ட பணத்திலிருந்து செலவுகளை செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் கைகளைக் கட்டும் செயலாகும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேர்தல்களின் போது ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான செலவுகள் எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய கடன்களின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவு, போக்குவரத்து மற்றும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகளும் எதிர்கால கொடுப்பனவின் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....