மண்டபம் மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது

0
432

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 10 பேரை தெற்கு மன்னார் அருகே கைது செய்தது.

கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here