சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது

Date:

பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரான தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வரும்போது கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த போராட்டத்தின் போது தர்ஷன ஹந்துங்கொட அலரி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய போராட்டக்காரர்களை ஊக்குவித்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு பல தடவைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், சில வாரங்களுக்கு முன்னர் மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போது, ​​அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு கிடைத்த நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் நாடு திரும்புகையில் நேற்று (05) இரவு அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கு இடம்பெறவுள்ள பரீட்சைகள் குறித்து கல்வி...

பலாங்கொடையில் காட்டுத் தீ

பலாங்கொடை நொன்பெரியலில் உள்ள நெக்ராக் வத்த அருகே உள்ள கோம்மொல்லி பாலத்துடு...

நேபாள் அரசுக்கு நேர்ந்த கதி NPP அரசுக்கும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறுகையில், தற்போதைய தேசிய...

பஸ்களை அலங்கரிக்கத் தடை

பஸ்களை அலங்கரிப்பதற்கும், மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...