2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டபடி நடத்துவதற்கு இலங்கையின் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் அடிப்படையில் நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்னெடுத்துள்ள நிலையில், இந்த விடயத்தில் உத்தரவுகள் அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.