பிரதமர் மஹிந்தவின் சவாலை ஏற்றது எதிர்கட்சி! அடுத்த மாதம் ஆட்டம் ஆரம்பம்

Date:

சதித் திட்டங்கள் எதுவுமின்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிக் காட்டுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் விடுத்த சவாலை ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்தார்.

பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும் மக்கள் ஆணை யாருக்கு இருக்கின்றது என்பதை கண்டறிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் மரிக்கார் கூறியுள்ளார்.

பிரதமரின் சவாலை ஏற்று அடுத்த மாதம் அனுராதபுரம் சல்கடுவ மைதானத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...