தேர்தலை நடத்தப் பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்குவோம்!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தப் போவதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

“எப்படியாவது இந்தத் தேர்தலை ஒத்திப்போட வேண்டும் என்பதில் இந்த அரசு குறியாகவே இருக்கின்றது. அதற்காக இதுவரை பல காரணங்களைக் கூறி வந்தது. இறுதியாக பணம் இல்லை என்று கூறி வருகின்றது.

தேவையற்ற விடயங்களுக்கு அதிக பணத்தைச் செலவு செய்கின்றது அரசு. வீண் விரயம் செய்கின்றது. அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்து பணத்தை வாரி இறைக்கின்றது.

ஆனால், மக்களின் ஜனநாயக உரிமையான தேர்தலை நடத்துவதற்கு மட்டும் பணம் இல்லையாம். அது பொய். தேர்தலை ஒத்திப்போடுவதற்காக அரசு இறுதியாகக் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் அது.

தேர்தலை நடத்துவதற்கு அரசு பணம் வழங்காவிட்டால் மக்களை திரட்டி வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவோம். பணத்தை வழங்கும்வரை விடமாட்டோம்” – என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டம்

உயர் நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது பணியாற்றும்...

இஷாரா செவ்வந்தி கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி...

அரசாங்க தரப்புக்கு மீண்டும் படுதோல்வி

பத்தேகம கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலில், ஐக்கியமக்கள்சக்தி...

தோட்ட தொழிலாளர் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி பேச்சு

முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன்...