பலாலியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

Date:

யாழ்ப்பாணம், பலாலி கிழக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்படும் காணிகளில் சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று யாழ். மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

பலாலி கிழக்கில் ஒரு தொகுதி காணியை விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் கடிதப் பரிமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விரைவில் கொழும்பில் இருந்து அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாணம் வருகை தந்து, காணி விடுவிப்புக்கான அளவீட்டுப் பணிகள் உள்ளிட்ட இதர பணிகளை முன்னெடுக்கும்.

அதனையடுத்து காணிகள் விடுவிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் மேலும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...