ஆண்டு இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும் : ருவான் நம்பிக்கை!

Date:

மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ருவான் விஜேவர்தன, இந்த வருட இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும், ஆனால் அதுவரை அவர்கள் சிரமங்களை தாங்க வேண்டியிருக்கும் என்றார்.

மின் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதை நாங்கள் அறிவோம். ஸ்டேஷனரி மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இவை அனைத்தையும் நாங்கள் அறிவோம். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது போன்ற கடினமான தீர்மானங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்க வேண்டியிருந்தது. இக்கட்டான நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தைக் பொறுப்பேற்றார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்தப் பொறுப்பை முன்வைத்த போது எதிர்க்கட்சியில் உள்ள எவரும் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“ஒரு காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் அதிக வலியை அனுபவிக்க வேண்டும். அதேபோல், இந்நாட்டு மக்கள் தற்காலிகமாக ஒரு கடினமான காலத்தை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைத்து மக்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்க முடியும். சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நன்கொடையாளர்களிடமிருந்து நாங்கள் உதவி பெறும்போது இது சாத்தியமாகும், ”என்று அவர் மேலும் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

மூத்த அரசியல்வாதி காலமானார்

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண காலமானார்.  சிறிது...

கைதாகி விடுதலையான முக்கிய அதிகாரி

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர்...

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...