சுற்றுலா அமைச்சின் முயற்சியில் ‘பயண அட்டை’ அறிமுகம்

Date:

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியாக சுற்றுலா அமைச்சு ‘பயண அட்டை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் (SLTDA) தேசிய அபிவிருத்தி வங்கிக்கும் (NDB) இடையில் நேற்று (பிப்ரவரி 21) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி, SLTDA இன் கீழ் சுற்றுலாத் துறைக்கு பல்வேறு சேவை வழங்குனர்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் ‘பயண அட்டை’யைப் பெறத் தகுதியுடையவர்கள், சுற்றுலாப் பயணிகளுடன் கையாளும் போது அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில் சேவை வழங்குபவர்களுக்கு மாத்திரமன்றி, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த தெளிவான, புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள், சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்படும் வெளிநாட்டு நாணயங்களைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தேவையான அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்தல் போன்ற பல தரமான சேவைகளை தொழில்துறைக்குள் வழங்குவதற்கு இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2025 அக்டோபரில் இலங்கைக்கு...

300 கிலோ ஹெரோயினுடன் இலங்கை மீனவர்கள் கைது

ஹெரோயின் போதைப்பொருள் 300 கிலோவுடன் இலங்கை மீனவர்கள் அறுவர் மாலைதீவு பொலிஸாரால்...

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...