சுற்றுலா அமைச்சின் முயற்சியில் ‘பயண அட்டை’ அறிமுகம்

Date:

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் முன்னேற்றுவதற்கான ஒரு முயற்சியாக சுற்றுலா அமைச்சு ‘பயண அட்டை’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கும் (SLTDA) தேசிய அபிவிருத்தி வங்கிக்கும் (NDB) இடையில் நேற்று (பிப்ரவரி 21) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி, SLTDA இன் கீழ் சுற்றுலாத் துறைக்கு பல்வேறு சேவை வழங்குனர்களாகப் பதிவுசெய்யப்பட்டவர்கள் ‘பயண அட்டை’யைப் பெறத் தகுதியுடையவர்கள், சுற்றுலாப் பயணிகளுடன் கையாளும் போது அவர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலாத் துறையில் சேவை வழங்குபவர்களுக்கு மாத்திரமன்றி, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த அட்டை வழங்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறித்த தெளிவான, புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிபரங்கள், சுற்றுலாப் பயணிகளால் கொண்டு வரப்படும் வெளிநாட்டு நாணயங்களைப் பரிமாற்றம் செய்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தேவையான அனைத்து பொருட்களையும் பெற்றுக்கொள்வதை உறுதி செய்தல் போன்ற பல தரமான சேவைகளை தொழில்துறைக்குள் வழங்குவதற்கு இந்த முயற்சி உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...