அரசாங்கம் மக்களுடைய ஜனநாயகத்தையும் உரிமையினையும் புறக்கணிக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டும். கிண்ணியாவில் நிரந்தர நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். கிண்ணியா, குச்சவெளி, மூதூர் வைத்தியசாலைகளின் அடிப்படை பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.