நாட்டு மக்களுக்கு எரிபொருள் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

Date:

தம்மிடம் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதால் பொது மக்கள் அநாவசியமாக பீதியடைய தேவையில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

எரிபொருள் முடிந்துவிடும் என்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வந்துள்ள இரண்டு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களில் இருந்து எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு கப்பல்களில் உள்ள எரிபொருள் சில நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் எனவும் எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

டீசல் ஏற்றிச் செல்லும் கப்பலும், பெற்றோல் ஏற்றிச் செல்லும் கப்பலும் சில நாட்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த நிலையில், டொலர் நெருக்கடி காரணமாக எரிபொருள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

எனினும், கப்பல்களுக்கு ஏற்கனவே பணம் செலுத்தப்பட்டு, எரிபொருள் இறக்கும் பணி தொடங்கியுள்ளது.

இந்தக் கப்பல்கள் 41,000 மெட்ரிக் டன் டீசல் மற்றும் 37,500 மெட்ரிக் டன் பெட்ரோலைக் கொண்டு வந்துள்ளன.
அடுத்த சில நாட்களில் மேலும் இரண்டு எரிபொருள் தாங்கிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி பொது மன்னிப்பு குறித்து சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிதி மோசடி கைதி ஒருவர் வெசாக்...

துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று கல்கிசை நீதவான்...

அர்ச்சுனா வெளியிட்ட செய்தி பொய்

கடந்த காலங்களில் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொள்கலன்களில், விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்...

கொவிட் அச்சம் வேண்டாம்

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள்...