இலங்கை கிரிகெட் வீரர்கள் ஏற்றிச் செல்ல இருந்த பஸ்ஸில் தோட்டாக்கள் மீட்பு

Date:

இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட தனியார் பேருந்தில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து சண்டிகார் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல இலங்கை வீரர்கள் தற்போது சண்டிகாரில் தங்கியுள்ளனர்.

டெஸ்ட் போட்டி மார்ச் 04-ம் திகதி தொடங்க உள்ளது.

இந்தியா டுடே செய்தியின்படி, இலங்கை வீரர்களை அவர்களது ஹோட்டலில் இருந்து மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தின் லக்கேஜ் பெட்டியில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சனிக்கிழமை தோட்டாக்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நேரத்தில் பேருந்து விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது…!

-போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய நபர் ஒருவர்...

சரித் அபேசிங்க மீது SJB எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய...

கைது கதையிலேயே மூழ்கியுள்ள ஜனாதிபதிக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடி புரியவில்லை

கைது, விசாரணை மற்றும் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி தொடர்ந்து கருத்து தெரிவிப்பதற்குப்...

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...