இலங்கை கிரிகெட் வீரர்கள் ஏற்றிச் செல்ல இருந்த பஸ்ஸில் தோட்டாக்கள் மீட்பு

Date:

இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட தனியார் பேருந்தில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து சண்டிகார் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல இலங்கை வீரர்கள் தற்போது சண்டிகாரில் தங்கியுள்ளனர்.

டெஸ்ட் போட்டி மார்ச் 04-ம் திகதி தொடங்க உள்ளது.

இந்தியா டுடே செய்தியின்படி, இலங்கை வீரர்களை அவர்களது ஹோட்டலில் இருந்து மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தின் லக்கேஜ் பெட்டியில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சனிக்கிழமை தோட்டாக்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நேரத்தில் பேருந்து விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...