இலங்கை கிரிகெட் வீரர்கள் ஏற்றிச் செல்ல இருந்த பஸ்ஸில் தோட்டாக்கள் மீட்பு

Date:

இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப்பட்ட தனியார் பேருந்தில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து சண்டிகார் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பல இலங்கை வீரர்கள் தற்போது சண்டிகாரில் தங்கியுள்ளனர்.

டெஸ்ட் போட்டி மார்ச் 04-ம் திகதி தொடங்க உள்ளது.

இந்தியா டுடே செய்தியின்படி, இலங்கை வீரர்களை அவர்களது ஹோட்டலில் இருந்து மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்திற்கு அழைத்துச் சென்ற பேருந்தின் லக்கேஜ் பெட்டியில் இருந்து இரண்டு தோட்டாக்கள் மீட்கப்பட்டன.

மெட்டல் டிடெக்டர்களைப் பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சனிக்கிழமை தோட்டாக்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட நேரத்தில் பேருந்து விடுதி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...