Tuesday, May 7, 2024

Latest Posts

13ஆவது திருத்தம் குறித்து ஜேவி.பி வெளியிட்டுள்ள கருத்து!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம் என்று ஜே.வி.பியின் முக்கியஸ்தர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

தெற்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது:-

“மாகாண சபை அறிமுகப்படுத்தும்போது அரசமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. இப்போது 13 உம்
நடைமுறையில் இல்லை; மாகாண சபையும் நடைமுறையில் இல்லை.

தெற்கு மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியல் தீர்வு எங்களுக்கு வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். அப்படியென்றால் தெற்கு மக்கள் 13 ஐ ஏற்கவில்லை. எமது நிலைப்பாடும் சம்பந்தனின் நிலைப்பாடும் ஒன்றுதான்.

அதுமட்டுமல்ல, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய – எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை எமது அரசால் மாத்திரமே முன்வைக்க முடியும். நாம் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம்.” – என்றார்.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.