பெண்ணை தாக்கிய ஊவா ஆளுநரின் மகன்

Date:

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர் கொழும்பு ஹெவ்லொக் தோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை ஜமால்தீன் குறித்த பெண்ணை தாக்கியதாகவும், காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெள்ளவத்தை பொலிஸார், கொள்ளுப்பிட்டி மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த பெண் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு அறிவித்து ஜமால்தீனுக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...