பெண்ணை தாக்கிய ஊவா ஆளுநரின் மகன்

Date:

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாம் ஜமால்தீனை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவர் கொழும்பு ஹெவ்லொக் தோட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளம் பெண் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை ஜமால்தீன் குறித்த பெண்ணை தாக்கியதாகவும், காயங்களுடன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வெள்ளவத்தை பொலிஸார், கொள்ளுப்பிட்டி மற்றும் கெப்பெட்டிபொல பிரதேசத்தில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த பெண் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்கு அறிவித்து ஜமால்தீனுக்கு எதிராக பயணத்தடை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...