குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்சி ஆச்சி எனப்படும் டெய்சி பாரஸ்டுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.