களுத்துறை – ஹொரணை நகரில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.
அரச வங்கியொன்றின் ATM மூலம் வைப்பிலிட கொண்டு சென்ற பணமே இவ்வாறு மர்ம நபரால் அபகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வங்கி ஊழியர் ஒருவர் இரண்டு பணப்பைகளுடன் பின்புற நுழைவாயில் வழியாக சென்றபோது, அங்கு வந்த நபர் ஒருவர் பணப்பையை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
