பாராளுமன்றத்தில் ஏற்படும் மாற்றம்

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசன வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் நாளைய அமர்வில் இருந்து அமலுக்கு வரும். இதன்படி, முன்னர் ஆளும் கட்சியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, பிவிதுரு ஹெல் உருமய தலைவர் உதய கம்மன்பில இரண்டாம் அடுக்கில் இருந்து நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க நேரிட்டது.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க இதுவரை நான்காம் அடுக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்ததோடு, தனது அமைச்சுப் பதவியின் காரணமாக அவருக்கு முதலாம் நிலை ஆசனத்தில் அமர வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவி உயர்வு பெற்ற திலும் அமுனுகமவும் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் இரண்டாவது வரிசை ஆசனத்தில் அமர்வார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...

நடக்கவே முடியாத வயதிலும் களத்துக்கு வருகிறார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள்...

இந்திய ஜார்கண்ட் மாநில மாநாட்டில் இதொகா தலைவர், ஶ்ரீதரன் எம்பி பங்கேற்பு

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா...

தங்காலையில் இருவர் சுட்டுக் கொலை

தங்காலை, உனகுருவாவில் உள்ள கபுஹேன சந்திப்பில் நேற்று மாலை 6.55 மணியளவில்...