பாராளுமன்றத்தில் ஏற்படும் மாற்றம்

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசன வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் நாளைய அமர்வில் இருந்து அமலுக்கு வரும். இதன்படி, முன்னர் ஆளும் கட்சியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, பிவிதுரு ஹெல் உருமய தலைவர் உதய கம்மன்பில இரண்டாம் அடுக்கில் இருந்து நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க நேரிட்டது.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க இதுவரை நான்காம் அடுக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்ததோடு, தனது அமைச்சுப் பதவியின் காரணமாக அவருக்கு முதலாம் நிலை ஆசனத்தில் அமர வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவி உயர்வு பெற்ற திலும் அமுனுகமவும் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் இரண்டாவது வரிசை ஆசனத்தில் அமர்வார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் செய்யும் ஊழல் அம்பலம்

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற துணைச் செயலாளர் சாமிந்த குலரத்ன, சபாநாயகர்...

ஷிரந்திக்கு FCID நாமலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (03)...

வெலிகம பிரதேச சபை NPP வசம்

வெலிகம பிரதேச சபையின் புதிய தலைவரை தேர்வு செய்ய இன்று (02)...

BAW M8 அறிமுகம், 1,500 EV விநியோகம், TELD உடன் இணைவு – Browns EV எட்டிய முக்கிய மைல்கல்

LOLC குழுமத்திற்குட்பட்ட Brown & Company PLC இன் மின்சார இயக்கம்...