பாராளுமன்றத்தில் ஏற்படும் மாற்றம்

Date:

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் காரணமாக பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆசன வரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் நாளைய அமர்வில் இருந்து அமலுக்கு வரும். இதன்படி, முன்னர் ஆளும் கட்சியில் முன்வரிசையில் அமர்ந்திருந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள அதேவேளை, பிவிதுரு ஹெல் உருமய தலைவர் உதய கம்மன்பில இரண்டாம் அடுக்கில் இருந்து நான்காம் அடுக்குக்குப் பின்வாங்க நேரிட்டது.

இதேவேளை, கைத்தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.திஸாநாயக்க இதுவரை நான்காம் அடுக்கு ஆசனத்தில் அமர்ந்திருந்ததோடு, தனது அமைச்சுப் பதவியின் காரணமாக அவருக்கு முதலாம் நிலை ஆசனத்தில் அமர வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இதேவேளை, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து போக்குவரத்து அமைச்சரவை அமைச்சராக பதவி உயர்வு பெற்ற திலும் அமுனுகமவும் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தில் இரண்டாவது வரிசை ஆசனத்தில் அமர்வார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ICCPR சட்டத்தின்...