சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாளை சந்திக்கும் ஜனாதிபதி

0
65

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08) பிற்பகல் 04.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சமர்ப்பித்துள்ள 15 அம்சங்கள் கொண்ட ஆவணம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here