வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்க தலைவர் ஜெயவனிதா கைது

Date:

வவுனியாவில் போராட்டம் நடத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றதாகக் கூறி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர் காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அனுமதியின்றி மின்சாரம் பெற்றதாக மின்சார சபை அதிகாரிகள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன தனது மகளைத் தேடிய போது, ​​முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார துண்டுப் பிரசுரத்தின் புகைப்படத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2210 நாட்களாக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போன தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மையை வெளிப்படுத்துவதற்காக ஜெயவனிதா உள்ளிட்ட தாய்மார்கள் நூற்றுக்கணக்கான உறவினர்களுடன் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். இவர்களது போராட்டம் இலங்கையின் மிக நீண்ட போராட்டமாக கருதப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...