அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை

Date:

அரசாங்கம் வழங்கும் நிதியை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக உரிய0முறையில் செலவழித்து அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு நன்மைகளை வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து உள்ளூராட்சி அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மக்களுக்காக அமுல்படுத்தப்படும் “அவஸ்வெசும” “உருமய” மற்றும் விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் மற்றும் “கதுர தசாப்தம்” வேலைத்திட்டத்தின் வெற்றிக்கு தீவிரமாக பங்களிக்குமாறு கேட்டுக் கொண்ட ஜனாதிபதி, இந்த அனைத்து வேலைத்திட்டங்களின் நன்மைகளும் மேலும் சேர்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கொழும்பில் உள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“சவிமடத்தின் எதிர்காலத்திற்கான முன்னுரை – 2024” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டத்தில், அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...