கோட்டாபய மக்களுக்கு செய்தது துரோகம் – ஆனந்த தேரர் பகிரங்க தாக்கு

Date:

மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அண்மையில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேரடியாகவே கடுமையாக விமர்சித்துள்ளார்.

பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மக்களுக்கு துரோகம் இழைத்து வீழ்ச்சியை எதிர்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தேரர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு நிருவாகத் திறமையோ, ஆளுமைத் திறமையோ இல்லையென்றும், தமக்கு நன்மை பயக்கும் ஆட்களையே அவர் சூழ்ந்து கொண்டார் என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மேலும் தெரிவித்தார்.

“அவர் தவறான பாதையில் பயணிப்பதாக நாங்கள் பலமுறை அவருக்குத் தெரிவித்தோம். இதனால் அவர் வீழ்ச்சியை சந்தித்தார். அவருக்கு ஆட்சி செய்யும் திறமை இல்லாததே இன்று நாம் இந்த நிலைக்கு முகம் கொடுக்கக் காரணம்” என தேரர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

இன்றைய வானிலை

மேற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை...

மது உற்பத்தி வரி குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு

நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மதுபான உற்பத்திக்கான வரி...