Sunday, September 8, 2024

Latest Posts

கணக்கறிக்கைகளை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகளை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்கத் தவறினால், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகக் கருதப்படும் உரிமை ரத்து செய்யப்படும் என்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல தடவைகள் தமது கணக்கு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இருப்பினும், சில அரசியல் கட்சிகள் தங்கள் கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.

“இதுவரை (2023-03-16) 2021 ஆம் ஆண்டிற்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகள் வியாழன் முதல் 14 நாட்களுக்குள் சமர்பிக்குமாறும், இல்லாவிடின் உரிமையை ரத்து செய்யப்படுமென பதிவு தபாலில் அறிவித்துள்ளது தேர்தல்கள் ஆணைக்குழு.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.