IMF ஒப்பந்தம் விரைவில் பாராளுமன்றில் சமர்பிப்பு

Date:

சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பல்வேறு கருத்துக்களை வெளியிடும் எதிர்க்கட்சிகளும், கட்சிகளும் அது தொடர்பில் பேசுவதற்கும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அவர்களின் இணையதளங்களில் வெளியிட எங்கள் நாட்டின் தரப்பிலிருந்து நாங்கள் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளோம். நம்மிடம் மறைக்க எந்த ரகசியமும் இல்லை. இது குறித்து நாட்டு மக்களிடம் பேச வேண்டும். சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கப்பட்டவுடன், நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த ஒப்பந்தங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். பெரும்பாலும் அடுத்த வாரம். இதுபற்றி நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கும், பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கும் கட்சிகளுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. அவர்களின் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கான தெளிவான சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதிலும் இன்று (9) காலை 8 மணி முதல் 48...

NDB விவகாரம்: இலங்கை மத்திய வங்கி அமைப்பில் மாற்றம் அவசியம்

-அடால்ஃப் தேசிய அபிவிருத்தி வங்கி PLC (NDB) இல் இடம்பெற்றதாகக் கூறப்படும்...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும்...

நிலக்கரி கொள்முதல் தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கை வெளியீடு

நுரைச்சோலை லக்‌விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் 2025/2026 பருவத்திற்கான...