பசில் நினைத்தபடி ஆடிய யுகம் முடிவு

0
139

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஷ விரும்பிய தேர்தலை நடத்த முடியாது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியலமைப்பை மாற்றியமைக்கும் சகாப்தம், நினைத்த தினத்தில் தேர்தல் வைக்கும் சகாப்தம், விருப்பத்திற்கேற்ப தேர்தலை ஒத்திவைக்கும் யுகம் தற்போது முடிந்துவிட்டதாக எம்.பி கூறினார்.

எனவே, இனியும் நாட்டையும் கட்சியினரையும் சிக்கலில் மாட்டாமல் தனது சொந்த நாட்டிற்கு சென்று நஷ்டத்தில் விழாமல் இருப்பதே நல்லது எனவும் ரணவக்க கூறுகிறார்.

இதேவேளை, அவதூறாக இல்லாமல் மக்களுக்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கும் பாராளுமன்றத்துக்கும் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here