Sunday, April 28, 2024

Latest Posts

மலையக மக்கள் தொடர்பில் IMF குழுவிடம் வேலுகுமார் எம்பி முன்வைத்த கோரிக்கை

IMF முன்மொழிவுகளில், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென, விசேட வேலைத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் IMF பிரதிநிதிகளிடம் முன்வைத்தார்.

இலங்கை வந்துள்ள IMF பிரதிநிதிகள், ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை, பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடல் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைப்பெற்றது. அதன் போது, ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார ஆலோசனைக்குழு அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இக் கலந்துரையாடலின் போது, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, உற்பத்தி செலவீன அதிகரிப்பால் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளை இழக்க நேரிடும் அபாயம், வரி முறையிலே காணப்படும் ஒவ்வாமை, மற்றும் சிறிய, நடுத்தர கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பாரிய பாதிப்புக்கள் பற்றி IMF பிரதிநிதிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

அதன் போது, சமூக நல பிரச்சினைகளின் அதிகரிப்பும் பேசப்பட்டது. இக் கலந்துரையாடலின் போது, பொருளாதார நெருக்கடியினால் பெருமளவு பாதிப்பை சந்தித்திருப்பது பெருந்தோட்ட தொழிலாளர்களே என்பதையும், அவர்களின் வறுமை நிலை 60 வீதத்தை விட அதிகரித்து விட்டது என்பதையும் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் சுட்டிக்காட்டினார்.

IMF முன்மொழிவுகளில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நிலை என்ன? அவர்கள் தொடர்பான உங்களது நிலைப்பாடு என்ன? என மேலும் வினவினார்.

அதற்க்கு IMF பிரதிநிதிகள், “நாம் முழு தேசத்தையும் அடிப்படையாக கொண்ட நலன்புரி திட்டத்தையே கவனத்தில் கொண்டுள்ளோம்” என குறிப்பிட்டனர்.

“அஸ்வெசும அதில் முக்கியமானதொன்று” என்பதையும் சுட்டிக்காட்டினார். அதன் போது, “நாட்டிலுள்ள ஏனைய பிரிவினரை விட மிக மோசமான பாதிப்பை எதிர்நோக்குவது பெருந்தோட்ட தொழிலாளர்களே. அஸ்வெசும கொடுப்பனவு கூட அவர்களுக்கு ஒழுங்கான முறையில் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அதன் தெரிவிலும் மிகுந்த பாராபட்சம் காட்டப்பட்டுள்ளது. எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கென தனித்த விசேட திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்” என்ற வேண்டுகோளை வேலு குமார் முன்வைத்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.