ஜானக ரத்நாயக்கவை பதவி நீக்கியமைக்கான கடிதம் அனுப்பிவைப்பு!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க, தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதில் கடித்த நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்று (28) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் அனைத்து செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் ஜனக ரத்நாயக்க தனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையிலேயே மேற்கொண்டுள்ளார் என்றும், பொது சபையாக அல்ல என்றும் அவர் மீது அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியிருந்த பின்புலத்திலேயே மேற்படி கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...