ஜானக ரத்நாயக்கவை பதவி நீக்கியமைக்கான கடிதம் அனுப்பிவைப்பு!

Date:

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜானக ரத்நாயக்க, தன்னைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கியமைக்கான காரணங்கள் குறித்து தமக்கு நோட்டீஸ் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் நிராகரிக்கும் பதில் கடித்த நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருக்கு இன்று (28) அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆணைக்குழுவின் அனைத்து செயற்பாடுகளையும் தீர்மானங்களையும் ஜனக ரத்நாயக்க தனது தனிப்பட்ட கருத்தின் அடிப்படையிலேயே மேற்கொண்டுள்ளார் என்றும், பொது சபையாக அல்ல என்றும் அவர் மீது அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தியிருந்த பின்புலத்திலேயே மேற்படி கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...

ரணிலுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்தும் விசாரணை இறுதிக்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்க எச்சரிக்கை

நவம்பர் 22 ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஒரு புதிய...

திருமலை சம்பவத்துக்கு திருமா கண்டனம்!

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? சிங்கள...