ஏப்ரல் 1ஆம் திகதி எரிபொருள் விலை குறையும்

Date:

அனைத்து வகையான எரிபொருட்களும் கிட்டத்தட்ட 100 ரூபாவால் குறைக்கப்படலாம் என்ற தகவல்கள் பரவிவருவதால் கொழும்பு உட்பட நாட்டில் பல பகுதிகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மீண்டும் நீண்ட வரிசைகள் ஏற்படுகின்றன.

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் எரிபொருள் விலையில் கணிசமாக குறைக்கப்படும் என்ற அச்சத்தில் சில எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் புதிய முற்பதிவுகளை செய்யவில்லை என்பதால், வழமைக்கு மாறான வரிசைகள் காணப்படுகின்றன.

ஏப்ரல் மாத விலை திருத்தத்தின் போது அரசாங்கம் எரிபொருள் விலையை கணிசமாக குறைக்கும் என்று மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைவதன் காரணமாகவும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் குறைவினாலும் இலங்கையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் குறைக்கப்படால் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியானது வெட்டுப்புள்ளி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப்...

இந்திய துணை ஜனாதிபதியுடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்...

இன்று நுகேகொடையில் பாரிய பேரணி

பல அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று...

40 மில்லியன் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள் கடத்திய மூவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வெளியே...