பசிலிடம் நேரடியாக ஜனாதிபதி கூறிய விடயம்

Date:

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வந்த பின்னர் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கான திட்டங்களை வகுத்துள்ளார்.

இவ்வாறே பசில் மீண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து எதிர்வரும் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

பொதுத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி சம்மதிக்க வைப்பதே இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலை தான் முதலில் நடத்துவேன் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தாம் தனது கூட்டணியின் வேட்பாளராக போட்டியிடுவேன் என்றும் ஜனாதிபதி பசிலிடம் நேரடியாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு மற்றும் கட்சியின் அரசியல் பற்றி சிந்தித்தால் முதலில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஆனால், மக்கள் ஜனாதிபதித் தேர்தலை கோருவதாகவும், வீழ்ந்த நாட்டை தாம் கையகப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ள ஜனாதிபதி, மக்கள் தம்மைப் புறக்கணிப்பார்கள் என நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொஹொட்டுவ இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...